பிரதான செய்திகள்

இனவாத செயலை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கண்டியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை கண்டிக்கும் வகையில் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி, பிரஜைகள் சமாதான சபை என்பவற்றுடன் இணைந்து முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

வௌ்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பம்பலப்பிட்டி பள்ளிவாசல் அருகே தொடங்கும் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சென்றடையவுள்ளது.

அதன் பின்னர் கண்டியில் நடைபெற்ற இனவன்முறைகளினால் அழிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் ஏனைய சேத விபரங்களுடன் கூடிய தகவல் அறிக்கை மற்றும் இனவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் கோரிக்கை மகஜர் என்பன ஐ.நா. அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி; நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

Editor

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? இரண்டாவது தொடர்..

wpengine

சமுர்த்தி பயனாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்துங்கள் பிரதமர் ராஜபக்ஷ

wpengine