பிரதான செய்திகள்

இணைக்குழு தலைவர் அலிஸாஹிர் மௌலானா

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நியமனக் கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையில் புதிதாக அவர் இணைத்தலைமை பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

நமது சூழல் மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதும் clean sri lanka வின் ஒரு பகுதியாகும்.

Maash

வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடுகள் அரசின் இலக்கு அமைச்சர் றிசாத்

wpengine

ஜனாதிபதியின் வருகையின் பின் முக்கிய அமைச்சர் பதவி விலகவுள்ளார்.

wpengine