பிரதான செய்திகள்

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவந்திருக்கும் பெனர் உள்ளிட்ட பொருள்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதுதொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சபைக்குள் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் தேடியறியவேண்டும்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, ஆளும் கட்சியினரும் சபைக்குள், பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குவதற்கான பொருள்களை கொண்டுவந்துள்ளனர். அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்வைக்குமாறு நளீன் பண்டார எம்.பி கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன், பதற்றமான நிலைமையொன்றும் ஏற்பட்டிருந்தது.

Related posts

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி, உற்பத்தியாளர்கள் சிரமம் .!

Maash

வருடாந்த கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டி

wpengine

வவுனியாவில் தேர்தல் கால கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் றிஷாட்!

wpengine