பிரதான செய்திகள்

‘அஸ்வெசும’ திட்ட மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

‘அஸ்வெசும’ சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகின்றது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இணையம் மூலமாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் இதுவரை 815,000 மேல்முறையீடுகளும் 11,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் சதொச விற்பனை வளாகத்தில் மனித எலும்புகள்

wpengine

மன்னார் நகரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம்- எம்.பிரதீப்

wpengine

ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர்! மஹிந்த கவலை

wpengine