பிரதான செய்திகள்

அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை

இறக்குமதி செய்யப்பட்ட அரசி பிளாஸ்டிக் அரிசி என மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கவனத்தில் கொண்டு நாடு முழுவதும் விற்பனை நிலையங்களில் அரிசி மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் போது செய்யப்பட்ட பரிசோதனையில் எந்த அரிசி மாதிரியிலும் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், இறக்குமதி செய்துள்ள அரிசியை பயன்படுத்த நுகர்வோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் திலக்கரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்! ஆளுநர் நடவடிக்கை

wpengine

ரணிலின் சகோதரனின் தொலைக்காட்சி சேவைக்கு சீல்

wpengine

அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை குழுவே தீர்மானிக்கும்

wpengine