பிரதான செய்திகள்

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன.

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர். எம். ஜிப்ரி  மற்றும் கந்தளாய் றியாஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு நடத்தப்பட்டுவரும் இந்த இலவச கருத்தரங்குகளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழருக்கு எதிரான இன அழிப்பு போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு கட்டவிழ்ப்பு

wpengine

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

wpengine