பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரிக்கை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வரும் வரை அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு அல்லது ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள், மாகாண அரசாங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்கள் காரணமாக குறித்த நேரத்தில் கடமைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் கைரேகை இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது, தாமதமாக வருபவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

தலைமன்னார் காட்டுப்பகுதியில் ஆயும்

wpengine

சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள்.

wpengine

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிவு உண்மைக்கு புறம்பானது என சுப்பர்மடம் மீனவர்கள் கவலை

wpengine