பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்.

இந்த அதிகாரிகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 7100 அரசத்துறை மற்றும் அரை அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் சம்பளம் இல்லாத விடுமுறையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு , – வெளியான மகிழ்ச்சி தகவல்!

Maash

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை! விஷேட அதிரடிப்படையினர் களத்தில்

wpengine

கல்பிட்டி-எத்தாலை முஸ்பர் மசூத் இளைளுனை காணவில்லை

wpengine