பிரதான செய்திகள்

அரசியல்வாதிகள் வலியுறுத்தினாலும்! சமஷ்டி தீர்வை மக்கள் விரும்பவில்லை.

சமஷ்டி தீர்வு அவசியம் என்பதை வடக்கின் அரசியல்வாதிகளே வலியுறுத்துவதாக அரசியல் அமைப்பு மீள உருவாக்கக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.


எனினும் வட மாகாண மக்கள் சமஸ்டியில் அக்கறைக்கொண்டிருக்கவில்லை என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

விசும்பாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற லால் விஜேநாயக்க, இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் வடக்கில் உள்ள பெரும்பாலானோர் ஒற்றையாட்சியையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லையென லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வில்பத்து சரணாலய வீதி வழக்கில் முன்னால் அமைச்சர் றிஷாட் 04வது பிரதிவாதி

wpengine

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

wpengine

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine