பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளை தோற்கடிக்க பௌத்த பிக்குகள் முன்வருவார்கள்

நாட்டுக்கு பாதகமாக செயற்படும் அரசியல்வாதிகளை தோற்கடிப்பதற்கு பௌத்த பிக்குகள் முன்நிற்பார்கள் என தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய வளங்களை விற்பனை செய்து நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஊர் பாடசாலைகளுக்கு மக்களை வரவழைத்து நாட்டுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுப்பார்கள்.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கு பௌத்த தேரர்களின் சூழ்ச்சிகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் உலமா கட்சி

wpengine

நாம் நாமாக இருப்போம் இளைஞனே!

wpengine

மடு கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் அவல நிலை – மக்கள் விசனம்

wpengine