பிரதான செய்திகள்

அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது.

தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சட்ட அமைப்பை அரசாங்கம் கேலி செய்வதாக குற்றம் சாட்டினார். 

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே கர்தினால் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தும் தடுக்க முடியாத அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய பாதுகாப்பு தொடர்பில் கர்தினால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், வேறு அரசாங்கத்தின் கீழ் இருந்தாலும் நீதி கிடைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

அவுஸ்திரேலியா சென்றோர்! மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் கோரிக்கை

wpengine

இலங்கையில் இறக்குமதி தடைகள் தளர்வு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Editor

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்.

wpengine