பிரதான செய்திகள்

அம்புலன்ஸ் வண்டியினை நிறுத்திவிட்டு வவுனியாவில் ஐஸ்கிறீம்! பல விமர்சனம்

அம்புலன்ஸ் வண்டியினை நிறுத்திவிட்டு வீதியில் ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்ட வவுனியா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வண்டி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே (பாதசாரிகள் கடவையில்) நேற்றையதினம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் அம்புலன்ஸ் வண்டியில் இருக்கும் புகைப்படமும் வண்டியின் சாரதி , வைத்தியர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஐஸ்கிறீம் சாப்பிடும் புகைப்படமும் , அன்புலன்ஸ் பாதசாரிகள் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நோயாளிகளுடன் அன்புலன்ஸ் வண்டியினை பாதசாரிகள் கடவையில் நிறுத்தி விட்டு ஐஸ்கிறீம் சாப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சங்குப்பிட்டியூடாக அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. ஏதேனும் ஒரு வாகனம் அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானால் நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் வழங்குவது.
இவ்வாறான வைத்தியசாலையின் சில உத்தியோகத்தர்களின் செயற்பாடு வைத்தியசாலையின் நிர்வாகத்தை பாதிப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வீதியில் நின்ற பேருந்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஐஸ்கிறீம் சாப்பிடுவது தவறில்லை.

நோயாளிகளுடன் அம்புலன்ஸ் வண்டியினை பாதசாரிகள் கடவையில் எவ்வித சமிஞ்சை விளக்குகளும் போடமால் நிறுத்தி விட்டு ஐஸ்கிறீம் சாப்பிடுவதே தவறாகும்.

சைட்டம் வந்தால் நோயாளிகளின் உயிர் ஆபத்து என கூச்சலிடும் வைத்தியர்களே நீங்களும் சற்று சிந்தித்து செயற்படுங்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்கும் மகிந்தவும்,நம்பிக்கைக்குத் துரோகமிழைத்த மைத்ரியும்!

wpengine

விவசாயிகள் ஆர்பாட்டம்! விவசாய அமைச்சரின் வீடு சுற்றிவளைப்பு

wpengine

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

wpengine