பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

அத்தியாவசிய தேவையொன்றிற்காக கொழும்பு நகரின் சில பிரதேசங்களுக்கு
இன்று மதியம் 12 .00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கோட்டை மா நகர சபை பிரதேசம் , பத்தரமுல்லை , கொஸ்வத்த , கலபலுவாவ , தலவதுகொட , ஜயவடநகம , மாலபே , ஹோகந்தர , மஹரகம , பொரலெஸ்கமுவ நகர சபை ஆளுகைப் பிரதேசம் மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களுகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை , கொழும்பு 06 மற்றும் கொழும்பு 08 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுளுக்கு ‘1924’ என்ற இலக்கத்தின் ஊடாக தீர்வு !

Maash

வடக்கில் இனவாதத்தை தூண்டுவது தெற்கு இனவாதிகளுக்கு ஊசியேற்றுவதாகும்- எஸ்.எம்.மரிக்கார்

wpengine

சிங்கள மக்களுக்கு மஹிந்த வீரன்! பிரபாகரனுக்கு நினைவு தூபி பிரச்சினை இல்லை

wpengine