பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் பாதை வேலைக்காக 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

(ஊடகப்பிரிவு)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், மற்றும் உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து மகம்மது, செல்லத்தம்பு, பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கல்லாறு கடற்கரை பகுதியில் கேரளா கஞ்சாப்பொதிகளை கைப்பற்றிய மன்னார் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர்

wpengine

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

wpengine

28ஆம் திகதி ஐ.நா கூட்டத்தொடர் இலங்கை, மியன்மார், ஆப்கான் தொடர்பில் கூடுதல் கவனம்

wpengine