பிரதான செய்திகள்

அமைச்சர் மனோவுக்கும் கூட்டமைப்புக்கும் பிரச்சினை!நான் தலையீட மாட்டேன்.

அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


தனியார் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு இன்று காலை வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பீக்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ் எம்.பீக்கள் கலந்து கொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம்.

இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்து கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையில் 11.30க்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டத்தை, அரை மணித்தியாலம் தாமதித்து 12 மணிக்கே ஆரம்பித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி தமது அறையில் காத்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் எம்.பீக்கள் வருவார்கள் என நாம் காத்திருந்தோம்.

என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், எம்.பீக்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டம், அவசர பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற அவசர கூட்டம். அனைவருக்கும் ஏதோ ஒரு முறையில் அவசர அழைப்பு தகவல் அனுப்பப்பட்டது, பரிமாறப்பட்டது, ஊடகங்களிலும் கூறப்பட்டது.

எம்.பீக்கள் ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பீக்களான அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்.பி முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது.

எம்.பி சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்து கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடக்கு, கிழக்கில் தொடரும்.

இவை பற்றி நானே முடிவு செய்வேன். இவை தவிர்ந்த வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், வடக்கு, கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தமிழ் நாடாளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் நாடாளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன்.

இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன்.

புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன.

Related posts

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம் – SriLakan President Anurakumara DIssanayaka

Editor

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

wpengine

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

wpengine