பிரதான செய்திகள்

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரபலங்கள் இருவரிடம் குறித்த ஊடகம் வினவிய போது அவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

எனினும் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த மே மாதம் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவராக வெளிநாடு சென்ற பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றார்.

எப்படியிருப்பினும் தற்போது பி.பி. ஜயசுந்தரவை பாதுகாக்க பசில் முன்வந்துள்ளமையினால் ஜனாதிபதி உட்பட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரை மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

Related posts

இந்தியாவில் “WhatsApp“ வர இருக்கின்ற ஆப்பு (விடியோ)

wpengine

இன்று வெளியாகும் இன்னுமோர் தீர்ப்பு ,பிரதமர்,அமைச்சரவை

wpengine

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

wpengine