பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றம் தாழ்த்தப்படும்

அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என ஜனாதிபதி செயலக சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் இதுவரையில் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முழு அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி நேற்றைய தினம் ஊடகப் பிரதானிகளிடம் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா மாவட்ட மக்களுக்கான விஷேட அறிவித்தல்

wpengine

மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம் : கலீல், இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கம்?

wpengine

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

wpengine