பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்-எஸ்.பி

நாட்டிற்குள் காணப்படும் சிக்கலான நிலைமையில், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது மிகச்சிறந்த விடயம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது சகல தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையடியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

Related posts

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம்.

wpengine

சகோதர்களுக்கிடைய பனிப்போர் நடைபெறுகின்றது.

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரச்சாரங்கள் -மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்க

wpengine