உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

 

எனினும் மக்களின் செல்பீ ஆர்வம் குறையவில்லை.
இந்நிலையில், அமெரிக்க, புளோரிடா மாநிலத்தின்  சுகர் லேண்ட் எனும் நகரில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் இருவர் சிரித்தவாறு செல் லிடத் தொலைபேசி மூலம் தம்மை படம்பிடித்துக் கொள்வதைப் போன்று இச் சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர சபை அதிகாரிகளால் இச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், இச் சிலை குறித்து உள்ளூர் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

Related posts

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும் -அமைச்சர் றிசாட்

wpengine

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக றிஷாட் பதியுதீன் கையொப்பம்

wpengine

இரண்டு பேருக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

wpengine