உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கட்டார் விஜயம்

சவுதி அரேபியா உட்பட நான்கு வளைகுடா நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொண்ட நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இன்று கட்டாருக்கு விஜயம் செய்துள்ளார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக் குற்றம் சாட்டி சவுதி அரேபியா, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது தடைகளை விதித்ததுடன், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

கட்டார் மீதான பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவர சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கட்டார் நிராகரித்திருந்தது. இந்நிலையில், இந்த இக்கட்டான நிலையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இராஜாங்க செயலாளர் ஆராய்வார் என அவரது சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், கட்டாரில் உள்ள துருக்கி இராணுவ விமானத் தளம் மூடப்பட வேண்டும், கட்டாரை தளமாகக் கொண்ட அரேபிய தொலைக்காட்சி வலையமைப்பான அல்-ஜசீரா நிறுவனம் மூடப்பட வேண்டும் போன்றவை உள்ளடங்கியுள்ளன.

Related posts

மாகாண சபை நிதி ஒதிக்கீட்டில் 1கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

wpengine

மன்னார், தாழ்வுபாடு கிராமத்தில் தென் பகுதி இளைஞர் இருவர் கைது

wpengine

பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! கிழக்கு முதலமைச்சரே?

wpengine