பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கு எதிராக பொதுபல சேனாவின் வழக்கு! ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பௌத்த மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டி சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய வழக்கு ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் ஐ.தே.க கலந்துகொள்ளும்

wpengine

16 அமைச்சர்களுக்கு அழைப்புவிடுத்த மஹிந்த

wpengine