பிரதான செய்திகள்

அதிகாலை வேன் மீது யானை தாக்குதல்! ஓருவர் மரணம் 10 பேர் வைத்தியசாலையில்

புத்தளம் – அநுராதபுரம் பாதையில் கருவலகஸ்வெவ மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் வேன் மீது காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த காட்டு யானைத் தாக்குதலில் உயிரிந்துள்ளவர், யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபர் என தெரிவந்துள்ளது.

இதில் காயமடைந்த 2 பெண்களும் 8 ஆண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்துள்ளவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று
இடம்பெறவுள்ளது.

Related posts

கிண்ணியா உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு சென்ற முன்னால் அமைச்சர்.

wpengine

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

wpengine

அமைச்சர் சமல் ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக அவரை கடுமையாக திட்டியுள்ளார்.

wpengine