உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அணி மாறுவது பற்றி கூற வைகோவிற்குத் தகுதி இல்லை: சாடும் ஜவாஹிருல்லா

அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது. மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதிப்பதில்லை. அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, வைகோவிற்கு எந்தத் தகுதியும் இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

Related posts

வங்குரோத்துவாதிகள் என்னை வசைபாடுகின்றார்கள்! மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியே! தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை

wpengine

மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கும் யோகேஸ்வரன் பா.உ ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

wpengine

ஜனாதிபதியினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷமான செய்தி

wpengine