பிரதான செய்திகள்

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

அசுத்தமான தண்ணீரை சுத்திகரித்து குடி நீராக மாற்றும் நவீன உதிரிப்பாகங்களை கொண்ட புதிய தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

எப்படியான அசுத்த நிலையில் இருக்கும் தண்ணீரையும் சில வினாடிகளில் குடிநீராக மாற்றும் வகையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவில் இருந்து இந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஜனாதிபதி பார்வையீட்டார்.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஆன மகிந்த அமரவீர, ரவி கருணாநாயக்க, றிஸாட்  பதியூதீன், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related posts

தலைப்பிறையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தல்

wpengine

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு பல கவச வாகனங்கள், பீரங்கிகளை வழங்கிய நேட்டோ!

Editor

ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் செப். 21 வரை வி.மறியல் நீடிப்பு!!!

wpengine